அம்னோவைச் சீர்குலைக்க மகாதீர் முயல்கிறார்!

- Shan Siva
- 08 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 8: நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் இருந்து அம்னோ விலகியதற்கு காரணம் DAP யை எதிர்க்க முடியாததுதான் என்று மகாதீர் கூறியிருந்தார்.
இது குறித்து மலேசிய சர்வதேச இஸ்லாமியப்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சியாசா ஷுக்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
மகாதீர் அம்னோவை
சீர்குலைக்கவும் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்குள்
பிளவுபடுத்தும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி அதன் உறவுகளை சீர்குலைக்கவும்
முயல்கிறார் என்று சியாசா ஷுக்ரி தெரிவித்தார்..
அம்னோவைப் பலவீனமாக
சித்தரிப்பதன் மூலம் அம்னோவை குறைமதிப்பிற்கு உட்படுத்த மகாதீர்
‘மலாய்க்காரர்களுக்கு எதிராக டிஏபி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் என்று அவர்
FMT இணைய ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *