மேலும் 3 மலேசிய ஹஜ் யாத்ரீகர்கள் புனித பூமியில் உயிரிழந்தனர்!

top-news
FREE WEBSITE AD

மக்கா, ஜூன் 17: புனித பூமி மக்காவில்  மேலும் 3 மலேசிய ஹஜ் யாத்ரீகர்கள் இறந்துள்ளனர்.  இத்துடன் புனித யாத்திரை சென்றவர்களின் இறப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

எட்டாவது சம்பவம் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தனது தங்குமிடத்திற்கு திரும்பிச் செல்லும் போது ஒரு பெண் இறந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத விவகாரத்துறை அமைச்சர் நயிம் மொக்தார் தெரிவித்தார்.

சிலாங்கூர், சுங்கை பூலோவைச் சேர்ந்த 66 வயது  சபீனா ஜலீல் மாரடைப்பால் இறந்தார்  என்று  நேற்றிரவு மத விவகார அமைச்சர் நயிம் மொக்தார் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்

.இறந்த ஆறாவது மற்றும் ஏழாவது யாத்ரீகர்கள் பஹாங்கின் ஜெங்காவைச் சேர்ந்த 75 வயதான பஹருதின் ஷூட் மற்றும் கெடாவின் அலோர் ஸ்டாரைச் சேர்ந்த 65 வயது  அப்த் மனாஃப் ஹனாபியா இருவரும்  முறையே ஜூன் 11 மற்றும் ஜூன் 13 அன்று இறந்ததாக அவர் கூறினார்.

பஹாருதீன் குடல் புற்றுநோயால் மக்காவில் உள்ள TH சிகிச்சை மையத்தில் இறந்தார். மனாஃப் மக்கா மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பால் இறந்தார்.

இதற்கிடையில், மக்காவில் உள்ள TH சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சனிக்கிழமை வுகுஃப் சஃபாரி திட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும், மாற்றியமைக்கப்பட்ட பேருந்தைப்  பயன்படுத்தி TH ஊழியர்களால் அராஃபத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும் நயிம் கூறினார்.

அவர்களில் பலர் சுவாசக் கோளாறுகள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மேலதிக இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

மெக்காவில் உள்ள TH சிகிச்சை மையத்தில் 187 படுக்கைகள் உள்ளன, இதில் மருத்துவ உபகரணங்கள், எக்ஸ்ரே மற்றும் பல் மருத்துவ சேவைகள், அவசரகால வார்டுகள் மற்றும் 17 ஆம்புலன்ஸ்கள் உள்ளன, இங்குள்ள 12 கட்டிடங்களில் மலேசிய யாத்ரீகர்கள் தங்கியுள்ளனர்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *