மகாதீரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12: பத்து பூத்தே மீதான விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) குழுவிலிருந்து ராஸ் ஷெரீப் மற்றும் இருவரை விலக்குமாறு தெரிவித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதீரின்  விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் RCI விசாரணையில் அவர் வழக்கறிஞர்களால் ஆஜராக முடியுமா என்பது குறித்த நீதித்துறை மறுஆய்வைத் தொடங்க மகாதீரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்தது.

ரஅவரது நீதித்துறை மறுஆய்வு முடிவடையும் வரை RCI விசாரணைக்கு தடை விதிக்க மகாதீரின் விண்ணப்பத்தையும் நீதிபதி நிராகரித்தார்.

ஆர்சிஐ விசாரணையை எந்த நிலையிலும் நிறுத்தி வைக்க முடியாது. இல்லையெனில் அது வீணாகிவிடும்.  செலவழிக்கப்பட்ட பொது நிதி வீணாகிவிடும் என்று நீதிபதி அமர்ஜித் சிங்  கூறினார்.

பத்து பூத்தே மீதான விசாரணை ஒரு பொது நலன் பிரச்சினை. இந்த வழக்கு தொடர்பாக மாமன்னர்   உயர் பதவியில் உள்ள நபர்களை நியமித்துள்ளார் என்று நீதிபதி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *