அதிகார துஷ்பிரயோகத்தை நிராகரியுங்கள்! தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூலை 8: ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை நிராகரிப்பதற்கான அரசாங்கத்தின் அழைப்பிற்கு செவிசாய்க்குமாறு நாட்டில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் இளைஞர் இயக்கங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், வலுவான நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்துடன், சமூகத்தில் ஊழல், அடக்குமுறை மற்றும் லஞ்சத்தை நிராகரித்து உரிமைகளைப் பாதுகாத்து நீதியை நிலைநாட்டினார் என்று அன்வார் கூறினார்.

இந்த பண்புகளை மக்கள் பின்பற்றி, 'ஹிஜ்ரத்' (புலம்பெயர்தல்) என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டு, தூக்கத்திலிருந்து எழுந்து, தங்கள் கண்ணியத்தை உயர்த்தினால், நாடு முன்னேறும், வளரும் என்று அவர் தெரிவித்தார்.

"ஹிஜ்ரத் என்பது காலாவதியான நடைமுறைகள்,  அநீதி, அடக்குமுறை மற்றும் பரவலான அவதூறு ஆகியவற்றை விட்டுவிடுவதாகும். இதைச் செய்வதன் மூலம் மட்டுமே நாம் மாறுவோம், நமது தேசத்தையும் மக்களையும் காப்பாற்றுவோம் என்று அன்வார் தெரிவித்தார்.

நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவன், ஆனால் எங்கள் உரிமைகள் மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கும்போது, ​​​​எனக்கு கவலையில்லை. நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், கண்டிக்கலாம், சிறையில் தள்ளலாம், (ஆனால்) நான் வெளியே வந்து போராடுவேன் என்று   அவர் கூறினார்.

நாடு இப்போது வளர்ச்சியடைவதில் போட்டி போட்டுக்கொண்டிருப்பதால் மலேசியர்கள் வெறுமனே இருக்க முடியாது, எனவே அனைவரும் அறிவாற்றலுடன் இருக்க வேண்டும், நீதி பற்றிய புரிதலை வளர்த்து, மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற ஒன்றிணைய வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார்.

அனைவரும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, ஹிஜ்ரத்தின் உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக பிரதமர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *