பெர்லிஸ் வெள்ளப்பெருக்கு - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கங்கார், செப் 19: பெர்லிஸில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து,  இரண்டு கூடுதல் தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன, இன்று காலை 9 மணி நிலவரப்படி 48 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட நிவாரண மையங்கள் கங்காரில் உள்ள எஸ்.கே டத்தோ அஹ்மட் மூசா மற்றும் ஆராவ்வில் எஸ்.கே.குபாங் காஜா ஆகிய இடங்களில் உள்ளன.

சுங்கை பாடாங், சிம்பாங் எம்பாட் பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 47 பேருக்கு எஸ்.கே. டத்தோ அஹ்மட் மூசாவில் உள்ள நிவாரண மையம் அடைக்கலம் அளித்து வருகிறது.

இதற்கிடையில், மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெர்லிஸின் திமாஹ் தசோஹ் அணையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாகவும், தற்போதைய அளவான 29.10மீட்டருடன் ஒப்பிடும்போது 29.49 மீட்டராக இருப்பதாகவும் Public Infobanjir இணையதளம் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *