புதிய கூட்டுறவு சட்டம் டிசம்பர் மாதத்தில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும்!

top-news
FREE WEBSITE AD

பாங்கி, ஜூன் 6-

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு புதிய கூட்டுறவு சட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யும்.

நாட்டின் கூட்டுறவுத் துறையின் நலன்களுக்காக இச்சட்டத்தின் வரைவு முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்களுடன் தற்போது தீவிரமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் சைமி டாவுட் கூறினார்.

புதிய கூட்டுறவு சட்டத்தின் அடுத்த வாசிப்பு, அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதே ஆண்டு ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு புதிய தொழிலையோ அல்லது தொடங்கும்போது, அவர்கள் ஒப்புதலும் அந்த ஒப்புதலுக்கு காலாவகாசம் தேவைப்படும்.

இது, தற்போது நாம் காணக்கூடிய கூட்டுறவுக் கழகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் விஷயங்களில் ஒன்றாகும். எனவே, புதிய சட்டத்தின் முக்கிய விஷயம் கூட்டுறவுக் கூட்டுறவுக் கழக இயக்கத்தின் தாராளமயமாக்கல் ஆகும், என்றார் அவர்.
இந்தப் புதிய சட்டம், 1993ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்படுகிறது.

மேலும் இதன் வரைவு மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட 16,000க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருக்கும்.

Teks rang undang-undang Koperasi baharu dijangka dibentang di Parlimen Disember ini. Ia bertujuan memperkukuh tadbir urus 16,000 koperasi di Malaysia. Undang-undang ini dijangka dikuatkuasakan Julai 2026 selepas melalui sesi libat urus dengan pelbagai pihak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *