TERENGGANU GLC நிறுவனத்தில் RM 1.4 MILLION ஊழல்! கணவன் மனைவி இருவரும் கைது!

top-news
FREE WEBSITE AD

அரசு GLC நிறுவனம் தொடர்பானப் பணமோசடி வழக்கில் தலைமை இயக்குநரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது. TERENGGANU வைச் சேர்ந்த அரசு நிறுவனமான GLC லிருந்து 1.4 மில்லியன் ரிங்கிட் பணப்பரிவத்தணைக்குப் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை இயக்குநர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவரின் கணவரும் போலி ஆவணங்களில் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் கைதூ செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட GLC நிறுவனத்தின் தலைமை இயக்குநரின் கணவரான 30 வயது ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானப் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படுவதாக SPRM தெரிவித்துள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *