கோயிலில் மோதிய சம்பவம் குடி போதையில் மோதவில்லை! - காவல்துறை விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, செப் 13: நேற்று ஈப்போ தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள கோவில் பகுதியில் கார் மோதி விபத்துக்குள்ளானது, ஓட்டுநருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவால் ஏற்பட்டதே தவிர, குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் அல்ல என்று பேரா காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் உறுதிப்படுத்தினார். 

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் எஸ்யூவி வாகனத்தை செலுத்திய அந்நபர் சம்பவத்தின் போது நீரிழிவு நோயால் இரத்தச் சர்க்கரைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவர் கூறினார்.
41 வயதான சம்பந்தப்பட்ட அந்த  உள்ளூர் மனிதர், தஞ்சோங் ரம்புத்தான் சுகாதார கிளினிக்கிலிருந்து சங்காட் கிண்டிங் நோக்கி பயணித்தபோது திடீரென சுயநினைவை இழந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாக அஸிஸி விளக்கினார்.

போக்குவரத்து விளக்குகளைக் கடந்து தனது பயணத்தைத் தொடர்ந்த பிறகு, ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வளாகத்தில் நுழைந்து, கோயில் தூணில் மோதியதாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த சம்பவம் குறித்து ஈப்போ மாவட்ட காவல்துறைக்கு பொது புகார் கிடைத்துள்ளதாகவும், இது ஓட்டுநர் குடிபோதையில் கோயில் பகுதியில் மோதியதாக தவறாக விவரிக்கப்பட்டுள்ளதாகவும்  அஜிஸி கூறினார்!


இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை 8.36 மணியளவில் போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.  தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள அருள்மிகு சமயபுர மாரியம்மன் கோவிலில் விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகமுதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவ பதிவுகளின் அடிப்படையில், ஓட்டுநருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது,ல். மேலும் சம்பவத்தின் போது இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அஜிஸி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எனவே, இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரியாமல், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் அல்லது உணர்திறன் மிக்க கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *