இதுதான் ஆரம்பம்! டீசல் விலை குறித்து முகைதீன் சாடல்!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11: அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க விரிவான நடவடிக்கைகள் இல்லாமல் டீசல் விலையை உயர்த்தியிருப்பது அரசாங்கத்தின் மோசமான முடிவு என்று முன்னாள் பிரதமர்  டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

இது தான் ஆரம்பம் என்று கூறிய  அவர், விரைவில் RON 95 பெட்ரோல் மானியங்களை அரசாங்கம் நீக்கினால் மக்கள் மேலும் சுமையை எதிர் நோக்குவார்கள் என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, அவர்கள் மக்களின் புகார்களுக்கு செவிசாய்க்கவில்லை என்பதற்குச் சான்றாகும் என்று முகைதீன் தெரிவித்தார்.

டீசல் விலையில் RM1.20 அல்லது 56% அதிகரிப்பு என்பது  மிக அதிகமாக உள்ளது. மேலும், மக்கள் ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உயர் வாழ்க்கைச் செலவுகளால் எவ்வாறு சுமையாக உள்ளனர் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

திடீர் அதிகரிப்புப் பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் பிற பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று பெரிக்கத்தான் நேஷனல் தலைவருமான அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *