நீர் தட்டுப்பாடு 6 மணிக்குள் குழாய்கள் சீரமைக்கப்படும்! - JKR SEPANG

top-news
FREE WEBSITE AD

இன்று காலை Sepang sungai pelek’வில் உள்ள சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pekan Sungai Pelek சாலையில் உள்ள சமிஞ்சை விளக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டை இழந்த லாரி, Sungai Pelek பகுதியின் முதன்மை நீர் குழாயைச் சேதப்படுத்தியதால் சம்மந்தப்பட்ட பகுதியில் நீர் தட்டுப்பாட்டை Sepang பொதுப்பணி ஆணையமான JKR SEPANG அறிவித்துள்ளது. குடியிருப்புவாசிகளின் சிரமம் அறிவதாகவும் இன்று மாலை 6 மணிக்குள் சேதத்திற்குள்ளான நீர் குழாய்களைச் சீரமைப்பு செய்வதாக JKR SEPANG தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய Sungai Pelek பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டுள்ளதாக JKR SEPANG தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *