RM 30,000 மதிப்புள்ள நகையைத் திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

top-news
FREE WEBSITE AD

கோலா சிலாங்கூர், செப் 19: கோலா சிலாங்கூரில் RM30,000 மதிப்புள்ள நகையை திருடியதாக நம்பப்படும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 12.25 மணியளவில், நகை வாங்குவதாக கூறி அந்தப் பெண் கடைக்குள் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தோராயமாக 74.05 கிராம் எடையுள்ள ஒரு தங்க நெக்லஸைப் பார்க்கும்படி அப்பெண் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அப்பெண் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிப்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் விரைவாக வெளியேறியதால் கடை ஊழியர்கள் யூகிக்க முடியாமல் தடுமாறியதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து, திருட்டு குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 380வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தலைவர் அசாஹருதீன் தாஜுதீன் உறுதிப்படுத்தினார்.

விசாரணையின் அடிப்படையில், அந்தப் பெண் RM30,000 மதிப்புள்ள நகையைத் திருடியதாக நம்பப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,ம் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *