ஆம்புலன்சில் வாக்களிக்க வந்த மாது! நடக்க இயலாது என்றாலும் கடமையை நிறைவேற்றினார்!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 6: பக்கவாதத்தால் தாம் அவதிப்பட்டாலும், தனக்கான உரிமையை நிலை நாட்டும் விதமாக  50 வயதான ரோஸ்னா ரம்லி என்பவர், சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து வாக்களித்தது, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாயாசன் அமல் மலேசியா ஆம்புலன்சில் வந்த அவர், இந்த இடைத்தேர்தலில் தாம் வாக்களிப்பதை எதுவும் தடுக்க முடியாது என்று கூறினார்.

கடந்த மூன்று வருடங்களாக  பக்கவாதத்தால் அவதிப்பட்டு வருவதாகவும், நடப்பதற்குக் கடினமாக இருப்பதால் ஆம்புலண்டில் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், தம்மால் கொஞ்சம் நடக்க முடிந்ததால்,  குழந்தைகள் தம்முடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர் என்று கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *