வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை மேம்படுத்தப்படும்! - உள்துறை அமைச்சு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 6: வெளிநாட்டுத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (FWCMS) குறித்த பொதுக் கணக்குக் குழு (பிஏசி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிஏசி அறிக்கையை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், தமது அதிகாரிகள் தற்போது அது குறித்து  ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள அமைச்சகம் என்ற வகையில், தா. தொடர்ந்து வலியுறுத்தும் நான்கு முக்கிய கட்டமைப்புகளை  கடைபிடிப்பதாகவும், புலம்பெயர்ந்தோர் செலவுகளை குறைத்து செயல்முறைகளை விரைவுபடுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

தங்கள் ஊரை விட்டு வெளியேறி இங்கு பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் தமக்கு உள்ளது, அதை நமது பொறுப்பாக ஆக்குவதுடன், அவர்களின் கணிசமான முதலீடுகள் காரணமாக முதலாளிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும், அவர்கள் சிறந்த சேவைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!


**""

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *