பினாங்கில் மரம் விழுந்து இருவர் மரணம்! - George Town

top-news
FREE WEBSITE AD

George Town இன் பிரபலச் சுற்றுலா தளமான Lebuh Gereja பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மரம் சரிந்து விழுந்ததில் வாகனத்தில் இருந்த சீனா நாட்டு சுற்றுப்பயணிகளான இருவர் உயிரிழந்தனர். தொல்பொருள் அருங்காட்சியத்தைப் பார்வையிட வந்தவர்கள் மழையின் காரணமாக வாகனத்தில் காத்திருந்த நிலையில் பலத்த காற்றால் அருகில் இருந்த மரம் சரிந்து வாகனத்தின் மீது விழுந்ததாக பினாங்கு மீட்புப் படை உதவி ஆணையர் Muhammad Syafiq Noor Azman தெரிவித்தார்.

30 வயது பெண்ணும் அவரின் தந்தை என நம்பப்படும் 50 ஆடவரும் சீனாவிலிருந்து மலேசியாவுக்கு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தில் இருந்த ஓட்டுநர் காயங்களுடன் தப்பியதாகவும் சம்பவ இடத்தில் இருந்த 5 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் Razlam  Hamid உறுதிப்படுத்தினார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *