சுங்கைப் பக்காப் இடைத்தேர்தல்... 9 மணி நிலவரப்படி 8.8% பேர் வாக்களிப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6: சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் புதிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து வாக்குச் சாவடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி தகுதியான வாக்காளர்களில் 8.8 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொகுதியின் கீழ் உள்ள 57 காவலர்களும் தபால் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளதால் சுங்கை பக்கப்பிற்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு இல்லை.

இன்றைய இடைத்தேர்தலில் மொத்தம் 39,151 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *