கால்வாயில் கவிழ்ந்த கார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதியவர்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, செப் 10: ஜொகூர், தாமான் பெர்லிங்கில் நேற்று கார்  ஒன்று கால்வாயில் விழுந்ததில் 68 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாகக்  காயமின்றி உயிர் தப்பினார்.

முதற்கட்ட விசாரணையில் அம்முதியவர், மூன்று வழிச் சாலையின் வலது பாதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது என்று ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட  காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

நடுப் பாதையில் வந்த ஒரு டாக்சி, திடீரென வலதுபுறப் பாதையில் நுழைந்ததால், அதைத் தவிர்ப்பதற்காக முதியவர் முயன்றதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *