MACC தலைமை ஆணையராக மீண்டும் அசாம் பாக்கி நியமனம்!

- Shan Siva
- 10 May, 2025
கோலாலம்பூர், மே 10: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையராக டான் ஸ்ரீ அசாம் பாக்கி மீண்டும்
நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 13,
2025 முதல் மே 12,
2026 வரை அமலில் இருக்கும்
இந்த முடிவு, சரியான நேரத்தில்
எடுக்கப்பட்டதாகவும், அதிகரித்து வரும்
சிக்கலான ஊழல் சவால்களுக்கு மத்தியில் அசாமின் தலைமையின் மீதான தொடர்ச்சியான
நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் மலேசிய ஊழல் கண்காணிப்பு (MCW) தலைவர் ஜெய்ஸ் அப்துல் கரீம் விவரித்தார்.
அசாமை தலைமை
ஆணையராக மீண்டும் நியமிக்க மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல்
அளித்துள்ளதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர்
நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *