வாசிப்பு நம்மைப் பண்படுத்தும்! - YB Saraswathy வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு உரமூட்டும் வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இன்று வாசிப்பு நூல்கள் ஒற்றுமை அமைச்சு வழங்கியது. 
இன்று தேசிய நூலக அரங்கில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ் ஆங்கிலம் தேசிய மொழி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றம் இயல் தமிழ் எழுத்தாளர் மன்றம் போன்ற பொது இயக்கங்களுடன் ஒற்றுமை அமைச்சின் தலைமையில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியை ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கல்வி நூல்களைத் தவிர்த்து பொது நூல்களை மாணவர்கள் வாசித்தால் பொது சமூகத்தின் மீதான அவர்களின் புரிதல் பண்பட்டதாகவும் இருக்கும் என ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *