எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்க அரசு தயாராகவே இருக்கிறது! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 9: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் ஒவ்வொரு எதிர்க்கட்சி எம்.பி.யும் தனித்தனியாக இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

 ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது, ஆனால் எந்தவொரு ஜனநாயக நாட்டின் நடைமுறையின்படியே அது செய்யப்பட வேண்டும் என்று பலமுறை கூறியும் இந்தச் செயல்முறை ஏன் மிகவும் சிக்கலானதாகிவிட்டது என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர், கட்சிப் பிரதிநிதிகள் தொடங்கி, நாங்கள் நியமித்துள்ள துணைப் பிரதமர் 2 (டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோப்) உடன் விவாதிக்க ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று அவர் நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பிய சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் (முடா-முவார்) துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்பு பெரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்தபோதும், அதே செயல்முறைதான் என்று அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *