ஐந்தடியில் ஓர் உலகம்! ‘Dunia Di Kaki Lima’

- Shan Siva
- 03 Jun, 2025
\‘வல்லினம்’ மற்றும் ‘பென் மலேசியா’ ஏற்பாட்டில், ‘முக்கோணக் கதைகள்’ எனும் இலக்கிய விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி தலைநகர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள YMCAவில் நடைபெற்றது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு கண்டது.
‘மை ஸ்கில்ஸ்’ அறவாரியத்தின் தோற்றுநர் பசுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மலாய்
சீன கதைகள் அடங்கிய மூனு புத்தகங்கள் வெளியீடு கண்டன.
மலாய் எழுத்தாளர் எஸ். எம்.
ஷாகீர் சிறுகதைகளின் தமிழ் மொழியாக்கம், ஏழு சீன எழுத்தாளர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்,
தமிழ்ச் சிறுகதைகளின் மலாய் மொழிபெயர்ப்புஸ்
நூல் என மூன்று புத்தகங்கள் வெளியீடு கண்டன.
பிற மொழி படைப்புகளை தமிழுக்கும், தமிழின் சிறந்த படைப்புகளை பிற மொழி சமூகத்திற்கும் அறிமுகப்படுத்தும்
நோக்கில் இந்த சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக தமிழ்ச் சிறுகதைகளை மலாய் மொழியாக்கம் செய்து வெளியாகியிருக்கும் ‘Dunia Di Kaki Lima’ புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள
சிறுகதைகள், மலேசியத் தமிழ்ச் சமூகம்
இந்நாட்டில் எதிர்க்கொண்ட பல்வேறு வாழ்வியல் சிக்கல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை.
தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் நகரங்களில் உதிர் மனிதர்களாகவும் நிலத்திலிருந்து
இடம்பெயர்ந்த வேரற்றவர்களாகவும், குடும்ப
நெருக்கடிகளில் நசுக்கப்பட்டவர்களாகவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள
மனிதர்களையும் அவர்களின் உளவியலையும் இந்தியர்கள் அல்லாத பெரும்பாலோர்
அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தொகுப்பு அவர்களை அறியத்தரும் ஒரு முயற்சி என்கிறார்
‘முக்கோணக் கதைகள்’ ஏற்பாட்டுக் குழுவின்
தலைவர் ம.நவீன்.
மலேசிய இந்தியர்கள் குறித்த
ஆழமான புரிதலை மலேசிய இலக்கிய வாசகர்களிடையே இத்தொகுப்பு உருவாக்கும் என தாம் நம்புவதாக
அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய இலக்கிய வரலாற்றில்
தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு மலாய் பதிப்பகம் வழியாக வெளிவருவது இதுவே முதன்முறை
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘Dunia Di Kaki Lima’ எனும் புத்தகத்தின் பிரதான தலைப்புக்குரிய
சிறுகதையை எழுதிய ப.கு.சண்முகம். தமது கதைக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய அங்கீகாரம்
குறித்து நம்மிடையே சிலாகித்துப் பேசினார்.
1976 ஆம் ஆண்டு எழுதிய ஒரு சிறுகதை, இன்று நாட்டின் முக்கிய இலக்கியக் குழுவால் கண்டறியப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, இன்று ஒரு சிறப்பான மலாய் புத்தகத்தில்
அக்கதை மொழிபெயர்க்கப்பட்டு இடம்பெற்றிருப்பது உண்மையில் ஒரு கிடைப்பதற்கரிய பரிசுதான்
என்கிறார் பா.கு.சண்முகம்.
அன்றைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில்
நம் தமிழ்ச் சமூகம், குறிப்பாக கைவிடப்பட்ட
நிலையில் இருந்த நம் தமிழர்கள் செய்த அஞ்சடி வியாபார விவகாரங்கள், அதைச் சுற்றிய பின்னணியைக் கதையாக
எழுதினேன். சீனர்கள் மொத்த வியாபரம் செய்து
வந்த நிலையில். அவர்களின் கடைகளில் நெத்திலி, வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சுத்தம் செய்து கொடுத்து
அதற்குக் கூலியாக 5 காசோ, பத்து காசோ பெற்றுக்கொள்வார்கள். கூடவே கெட்டுப்போன வெங்காயம், நெத்திலி, பூண்டுகளையும் சீனர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, அதை எடுத்து
வந்து கூறுகளாக வைத்து இவர்கள் விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தினார்கள். அதைத்தான்
‘அஞ்சடியில் ஓர் உலகம்’ என எழுதினேன்.
அந்தக் கதையைக் கண்டெடுத்து, அதற்காக என்னைக் கண்டுபிடித்து, முறையாக அனுமதியும் பெற்று இன்று மலாய் இலக்கியத்தில் எனது கதையை இடம்பெறச் செய்த ம.நவீன், அ.பாண்டியன், சரவணன் உள்ளிட்ட அனைவருக்கும், வல்லினம் மற்றும் பென் மலேசியா அமைப்பிற்கும், மை ஸ்கில்ஸ் பசுபதி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவருமான ப.கு.சண்முகம் கூறினார்!
‘Mukonak Stories’ mengadakan festival sastera dengan pelancaran tiga buku dalam bahasa Tamil, Melayu dan Cina. Buku ‘Dunia Di Kaki Lima’ memaparkan kisah masyarakat Tamil Malaysia, mendapat perhatian luas. Usaha memperkenalkan karya pelbagai bahasa kepada masyarakat sastera Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *