தமிழ்நாடு அரசு உதவியால் அஜித் குமார் சகோதரர் நவீன் அதிருப்தி!

top-news
FREE WEBSITE AD

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இவருக்கு ஏற்பட்ட காவல் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அரசு வேலையும், வீட்டு மனைப் பட்டாவும் திருப்தி அளிக்கவில்லை என அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"எனக்குக் கொடுத்த அரசு வேலையில் திருப்தி இல்லை. நான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் வேலை கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தினமும் அவ்வளவு தூரம் போய் வருவது மிகவும் சிரமம். இதை மாற்றித் தருமாறு கேட்டுள்ளோம், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை."

"அதுபோல், தண்ணீர் வசதி இல்லாத காட்டுப்பகுதியில் 3 சென்ட் இடத்தை ஒதுக்கியுள்ளார்கள். இதுவும் எங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது," என நவீன்குமார் தெரிவித்துள்ளார். அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஐ.டி.ஐ படிப்பை முடித்தவர் என்பதால், அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப இந்தப் பணி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நவீன்குமாருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார். அரசுப் பணி வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உதவிகள் தற்போது நவீன்குமாருக்குத் திருப்தி அளிக்காத நிலையில், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *