Khairy Jamaluddin மீதான வழக்கு! ஆதாரமில்லை என நீதிமன்றம் உத்தரவு!

- Sangeetha K Loganathan
- 18 Apr, 2025
ஏப்ரல் 18,
முன்னாள் சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin கோவிட் தொற்று பரவலை நிர்வகிக்கவும் தடுக்கவும் தவறியதற்கு எந்தவோர் ஆதாரமுமில்லை என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கைரி சுகாதார அமைச்சராக இருந்த போது கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தவறியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றை முறையாகக் கையாண்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்று என உலகச் சுகாதார அமைச்சு தெரிவித்த நிலையில் சுகாதார அமைச்சராக இருந்த Khairy Jamaluddin தகுதியான அணுகுமுறைகளை மேற்கொண்டதில் எந்த சந்தேகமுமில்லை என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றால் உலக நாடுகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் மலேசியாவும் கோவிட்டை முறையாகக் கையாண்டதால் கோவிட் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தியதாகவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Mahkamah Tinggi memutuskan tiada bukti menyokong dakwaan bahawa Khairy Jamaluddin gagal mengurus penularan COVID-19 semasa menjadi Menteri Kesihatan. WHO turut mengiktiraf Malaysia antara negara yang berjaya menangani wabak itu dengan berkesan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *