காவலரின் தலை முடியை பிடித்து இழுத்த நபரின் கை மறுநாள் மாவுக்கட்டில் ஏன்?

top-news
FREE WEBSITE AD


அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திடீரென அங்கிருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து அந்த நபரை அப்புறப்படுத்த முயன்ற போது திடீரென அவர் பெண் டிஎஸ்பிஐ தாக்கினார். தொடர்ந்து டிஎஸ்பி உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை சூழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென போலீசாரையும் பெண் டிஎஸ்பியையும் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர்.

சிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் சூழ்ந்து கொண்ட காவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து அவர்களை தாக்க தொடங்கினர். பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய விவகாரத்தில் எட்டு பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல், கூட்டு சதி உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் டிஎஸ்பிஐ தலைமுடியை பிடித்து இழுத்த காளீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 116 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே காளீஸ்வரனை கைது செய்ய போலீசார் சென்றபோது அவர்களிடமிருந்து தப்பி ஓட காளீஸ்வரன் முயன்றதாகவும், அப்போது அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *