பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு அண்ணாமலை விருப்​பமனு தாக்​கல் செய்யவில்லை!

top-news
FREE WEBSITE AD

பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​பமனு தாக்​கல் இன்று நடை​பெறுகிறது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​பமனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மாநில தலை​வர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் தேர்​தலுக்​கான விருப்​பமனுக்​களை கட்​சி​யின் இணை​யதள​மான www.bjptn.com என்ற இணை​யதளத்​தில் இருந்து பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். ஏப்​.11-ம் தேதி வெள்​ளிக்​கிழமை மதி​யம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்​டி​யிட விருப்​ப​முள்​ளவர்​கள் விருப்​பமனுவை மாநிலத் தலைமை அலு​வல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்.

மூன்று பரு​வம் தீவிர உறுப்​பின​ராக​வும் மற்​றும் குறைந்​தது 10 ஆண்​டு​கள் அடிப்​படை உறுப்​பின​ராக​வும் உள்​ளவர் மாநில தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட தகுதி பெறு​வார். இவரை கட்​சி​யில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாநில பொதுக்​குழு உறுப்​பினர்​கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்​வ​மாக ஒப்​புதல் பெற்று பரிந்​துரைக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மாநில தலை​வருக்​கான தேர்தல் நாளை (ஏப்​.12-ம் தேதி) நடை​பெறும் என்​றும் 13-ம் தேதி முடிவு அறிவிக்​கப்​பட்டு புதிய தலை​வர் பதவி​யேற்​பார் என்​றும் இதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் உள்ள  வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்று வருவதாகவும் பாஜக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

மாநில தலை​வர் பதவிக்கு போட்​டி​யிடு​வோர் 10 ஆண்​டு​கள் அடிப்​படை உறுப்​பின​ராக இருக்க வேண்​டும் என்று தமிழக பாஜக தகுதி நிர்​ண​யம் செய்​துள்​ளது. இதன் காரண​மாக, தற்​போதைய தலை​வர் அண்​ணா​மலை, அதி​முக​வில் இருந்து விலகி பாஜக​வில் இணைந்து எம்​.எல்​.ஏ​வாக பதவி வகித்து வரும் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோர் பாஜக மாநிலத் தலை​வர் போட்​டி​யில் பங்​கேற்க முடி​யாத சூழல் உரு​வாகி​யுள்​ளது.

கடந்த மாதம் டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, 'மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை,' என செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக கூறியிருந்தார். ஆனாலும், பாஜக தொண்டர்கள் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என அவருக்கு தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பி வந்தனர்.

அதேவேளையில், நயினார் நாகேந்திரன் டெல்லியிலேயே முகாமிட்டிருந்ததால், அடுத்த மாநில தலைவர் அவர் தான் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை, அதன்பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியிடம், 'மாநில தலைவர் தேர்தலுக்கான போட்டியில் நான் விருப்பமனு தாக்கல் செய்ய போவதில்லை. போட்டியிட போவதும் இல்லை,' என தெரிவித்துள்ளார். இதன்மூலம், மாநில தலைவருக்கான தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *