உட்கட்சி மோதல்கள் இன்னும் 10 ஆண்டுகளில் அழிவைக் கொண் டு வரலாம்! - நூருல் இஸ்ஸா எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 20: பிகேஆர் துணைத் தலைவர் வேட்பாளர் நூருல் இஸ்ஸா அன்வார், உட்கட்சி மோதல்கள் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் கட்சியின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்.

கட்சித் தேர்தல்கள் முடிந்ததும் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைக்குமாறு பிகேஆர் தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராஹிமின் மகள் வலியுறுத்தினார்.

எதிர்வரும் சவால்களைக் கையாள முடியாத ஒரு பிகேஆர், அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் மறைந்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

தேர்தல் சமயத்தில் நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில்தான் முடிவடைகிறோம். தேர்தலுக்குப் பிறகு நாம் முன்னேற வேண்டும் என்று அவர் நேற்று நெகிரி செம்பிலானில் கூறினார்.

அடுத்த 24 மாதங்களில் கட்சியை அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயார்படுத்துமாறு அனைத்துத் தலைவர்களையும்  அவர் லியுறுத்தினார்.

அடுத்த 24 மாதங்களில் ஓரங்கட்டப்பட்ட இடங்களை வெல்வதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

 கட்சியை வலுப்படுத்தவும், பிகேஆர் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சமாளிக்கவும் மத அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நூருல் இஸ்ஸா கூறினார். இதேபோன்ற சூழ்நிலைகளில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் கட்சியுடன் உறுதியாக நின்ற நாட்களை நினைவு கூர்ந்தார்.

கட்சி உறுப்பினர்கள் தங்கள் இலட்சியவாதத்தில், குறிப்பாக அதன் அடிமட்ட உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வதில் கட்சியின் நம்பிக்கையில் உறுதியாக நிற்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள வலுவாக இருக்கவும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் நாம் இதுவரை சாதித்ததை இழக்க நான் விரும்பவில்லை. இது என்னைப் பற்றியது அல்ல, நீதியை நிலைநாட்டுவதில் எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்!


Nurul Izzah Anwar memberi amaran bahawa perpecahan dalaman PKR boleh membawa kepada kejatuhan parti dalam 5–10 tahun. Beliau menggesa perpaduan, persiapan pilihan raya, dan kerjasama dengan ilmuwan bagi memperkukuh parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *