மோடியைச் சந்திக்கும் அன்வார்.... முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமையும் என இந்திய ஊடகங்கள் செய்தி!

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆகஸ்ட் 14: மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அடுத்த வாரம் புதுடெல்லிக்கு வருகை தரும் போது இந்தியா மற்றும் மலேசியா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பிராந்திய பாதுகாப்பு, தொழிலாளர், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகியவை அன்வாருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் இருந்து பிரதமர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

அன்வார் ஜனவரி 2019 இல் புது தில்லியில் ஒரு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குச் சென்றார், அந்த நேரத்தில் மோடியை சந்தித்தார், ஆனால் 2022 இல் பிரதமரான பிறகு அவர் இந்தியாவிற்குச் செல்வது  இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே  இருதரப்பு பொருளாதார உறவுகளை இந்திய ஊடகங்கள் உயர்த்திக் காட்டியுள்ளன.

புதிய களங்கள் மற்றும் பொருட்களைச் சேர்க்க 12 ஆண்டுகால விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (CECA) மறுபரிசீலனை செய்வதற்கான செயல்முறையை இரு தரப்பினரும் தொடங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியத் தொழிலாளர்களைத் தருவிப்பதும்  முக்கிய விஷயமாகப் பார்க்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *