எந்தவொரு தனிநபரையும் விசாரிக்க எம்சிஎம்சிக்கு உரிமை உண்டு!

- Muthu Kumar
- 18 May, 2025
ஜொகூர் பாரு, மே 18-
எந்தவொரு புகார் கிடைத்தாலும், விசாரணைக்கு எந்தவொரு தனிநபரையும் அழைக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக
ஆணையம், எம்சிஎம்சிக்கு உரிமை உள்ளது.மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், விசாரணை அறிக்கை திறக்கப்படவிருப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
"வழக்கமாக புகார் இருந்தால், விசாரணைக்காக அவர்கள் விசாரணை அறிக்கையைத் திறப்பார்கள். அதன் பின்னர், அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சமர்ப்பிப்பார்கள். புகார் இருந்தால், வழக்கமாக எம்சிஎம்சி அவசியம் என்று நினைத்தால், நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு," என்றார் அவர்.சனிக்கிழமை, ஜொகூர், ஸ்ரீ ஸ்டுலாங் பிபிஆர் பல்நோக்கு மண்டபத்தில் மடானி நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
MCMC berhak memanggil individu untuk siasatan jika menerima aduan, kata Timbalan Menteri Komunikasi. Jika perlu, siasatan dibuka dan tindakan diambil berdasarkan laporan. Beliau berkata demikian selepas merasmikan program Madani di Johor.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *