நகைச்சுவை நடிகர் சத்தியாவுக்கு பிரதமர் அன்வார் உதவி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 29: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தியா என்று அழைக்கப்படும்  நாட்டின் மூத்த நகைச்சுவை நடிகர் சத்தியா பெரியசாமிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உதவி செய்துள்ளார்.

இந்த நன்கொடையை அவரது அரசியல் செயலாளர் அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌசி சமீபத்தில் தனது சார்பாக வழங்கியதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

 சத்தியாவுக்கு இன்னும் வழக்கமான சிகிச்சை தேவை என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக  அன்வார் பதிவிட்டுள்ளார்.

சத்தியா விரைவில் குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ள அன்வார்,  இதனால் அவர் நாட்டின் கலைத்துறைக்குத் தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *