இந்தியிலிருந்து, தமிழ்மொழிக்குத் திருத்தம் செய்த சுகாதார அமைச்சு! துணை அமைச்சர் செனட்டர் K.Saraswathy பாராட்டு!

top-news
FREE WEBSITE AD

Sungai Buloh அரசு பொது மருத்துவமனையில் Tempat Duduk Keutamaan எனும் வாசகம் ஆங்கிலம், சீன மொழிகளுக்கு அடுத்து இந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்ததை எதிர்த்து சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பிய நிலையில் உடனடி நடவடிக்கையாகச் சிலாங்கூர் மாநிலச் சுகாதார ஆணையம் இந்திமொழியிலிருந்த குறிப்பிட்ட வாசகத்தைத் தமிழ் மொழிக்குத் திருத்தியிருப்பது தமிழ் மொழிக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதையை வெளிப்படுத்துவதாக ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியர்களின் உணர்வை மதித்து சுகாதார அமைச்சு உடனடியாகத் திருத்தம் செய்திருப்பதற்குத் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எதிர்வினையாற்றிய தமிழ் ஆர்வலர்களுக்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். மேலும் இது மாதிரியானத் தவறுகள் நடக்காமல் இருக்கவும் வேண்டும் என ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *