அமெரிக்க வரி விவகாரம்.... மே 5-ல் சிறப்புக் கூட்டம்! - அன்வார்

- Shan Siva
- 28 Apr, 2025
கங்கார், ஏப்ரல் 28: மலேசியா மீது அமெரிக்கா விதித்த கட்டண உயர்வு
விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க மே 5 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்
தொடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின்
வளர்ச்சியில் அனைத்து தரப்பினரும், அனைத்து மக்களும்
கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் இந்த நாட்டின் கண்ணியத்தை உயர்த்த முயற்சிப்போம்
என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மலேசியா ஒரு
சிறந்த நாடு, நாம் ஒன்றுபட்டு நமது பொருளாதார கண்ணியத்தை
உயர்த்த கடுமையாக உழைத்தால், ஆசியாவின் சிறந்த
நாடுகளில் ஒரு முன்மாதிரியான நாடாக மலேசிய இருக்க முடியும் என்று அவர் கூறினார்.
கோலா பெர்லிஸில் நடைபெற்ற பெர்லிஸ் மாநில அளவிலான ஐடில்ஃபிட்ரி 2025 மதனி கொண்டாட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்!
Perdana Menteri Anwar Ibrahim umum sidang khas Parlimen bermula 5 Mei bagi membincangkan tindakan kerajaan terhadap kenaikan tarif oleh Amerika Syarikat. Sidang ini beri peluang ahli Parlimen berbincang cara atasi kesan ekonomi dan pertahan maruah negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *