ரவாங்கில் 36 வயது ஆடவர் சுட்டுக் கொலை! – சிலாங்கூர் காவல் துறை!

top-news
FREE WEBSITE AD

நேற்று இரவு 10 மணியளவில் RAWANG சாலையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பானக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது, இது தொடர்பாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தேடப்படும் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் 36 வயது உள்ளூர் ஆடவரைக் கைது செய்யும் போது சந்தேக நபர் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவல் அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan விளக்கமளித்தார். நேற்றிரவு 9.30 மணியளவில் Bandar Bukit Beruntung சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் சுடப்பட்ட ஆடவர் மீது முன்னமே 16 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் அவரைக் கைது செய்வது தான் காவல் துறையின் நோக்கமாக இருந்ததாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *