காராக் நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 36.8 வது கிலோமீட்டரில் உள்ள சாலைத் தடுப்பின் மீது டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் 50 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் சம்பந்தப்பட்ட டேங்கர் லாரியை ஓட்டிச் சென்ற போது,இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக  விசாரணையில் கண்டறியப்பட்டது என்று ஏசிபி நூர் அரிஃபின் கூறினார். 

நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில்  மோதி அதிலிருந்த சமையல் எண்ணெய் கொட்டும்படியான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து,  கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர்,  உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமட்  டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தினார். 

கனமழை காரணமாகவும், மோசமான சாலை காரணமாகவும் டேங்கர் லாரியின்  ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக  அவர் தனது  அறிக்கையில் தெரிவித்தார்.

இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், சாலைப் போக்குவரத்து விதிகள் 1959 (விதி 10 LN 166/59) விதி 10 இன் கீழ் இந்த சம்பவம் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *