சரவாக் பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

சரவாக்கில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் 2026 முதல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படிப்படியாகக் கற்பிக்கும் என்று மாநில கல்வி  மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோலண்ட் சகா தெரிவித்தார்.

கணிதம், கூடுதல் கணிதம், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்கள் ஆங்கிலத்தில்  கற்பிக்கப்படும்   என்று சகா கூறினார்.இந்த அறிவிப்பு 2026 ஆம் ஆண்டில் படிவம் 1 மாணவர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர்கள் ஆரம்பப் பள்ளி படிப்பினை ஆங்கிலத்தில் முடித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

சரவாக் சட்டத்துறை வழிகாட்டுதலின் பேரில்  தனது அமைச்சும்,  மத்திய கல்வி அமைச்சும் இதற்கான  சுற்றறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வடிவமைத்து அதனை  உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக  மாநில சட்டமன்றத்தில் கூறினார்.

சரவாக்கில் உள்ள 6 ஆம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான மதிப்பீடுகளை 2025 முதல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். படிவம் 3 மாணவர்கள் 2028 முதல் இதேபோன்ற தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *