முனிச் டிஃபெண்டர் டேலி பிளைண்ட் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்தார்!

top-news
FREE WEBSITE AD

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பேயர்ன் முனிச் டிஃபெண்டர் டேலி பிளைண்ட், நெதர்லாந்துக்காக 108 போட்டிகளில் விளையாடிய பிறகு சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

2014 உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் 2022 இல் காலிறுதி போட்டிக்கு வந்த டச்சு அணியில் 34 வயதான அவர் இரண்டு முறையும் அர்ஜென்டினாவிடம் தோற்றார்.

2014 ஆம் ஆண்டு டச்சு பயிற்சியாளர் லூயிஸ் வான் காலின் ஆலோசனையில் அவர் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டார்.ஜனவரி 2023 இல் அவர்  பேயர்ன் முனிச்சிற்காக கையெழுத்திட்டார், ஸ்பானிஷ் லா லிகாவில் ஜிரோனாவுக்குச் செல்வதற்கு முன் ஜெர்மன் பட்டங்கள் வெல்வதற்கு உதவினார்.

2019 ஆம் ஆண்டில்  சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால்  அவரது இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

11 வருடங்களாக அந்த அழகான ஆரஞ்சு சட்டையை அணிந்து என்னால் முடிந்தவரை வெற்றிக்காக விளையாடி உள்ளேன். இது எனக்கு நிறைய, பல அழகான தருணங்களை கொடுத்துள்ளது.

டேலி பிளைண்ட் 2013 இல் இத்தாலிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் அறிமுகமானார். யூரோ 2024 ஆம் ஆண்டு ருமேனியாவுக்கு எதிராக டச்சு அணிக்காக அவர் கடைசியாக விளையாடினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *