KKB இடைத்தேர்தல் தயார் நிலையில் போலீஸ்! - காவல்துறை தலைவர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD



கோலா குபு பாரு இடைத்தேர்தலில் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக போதிய போலீஸ் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இடைத்தேர்தலுக்கு முன்பும், தேர்தலின் போதும், அதற்குப் பிறகும் கடமையில் இருப்போம் என்று அவர் கூறினார்.

இன்று,  போலீஸ் பயிற்சி மையத்தில்  ராயல் மலேசியா போலீஸ்
ஆட்டிசம் மையத்தில் நடந்த ஆட்டிசம் தின நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைவரின், குறிப்பாக வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இடைத்தேர்தலின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு அதிக அனுபவம் இருப்பதாக ஐஜிபி தெரிவித்தார்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர்  டத்தோ ஹுசைன் உமர் கான் களத்தில் தளபதியாக உள்ளார் என்று குறிப்பிட்ட அவர்,


நிலைமை மற்றும் பணியாளர்களை அனுப்புவதை கண்காணிக்க தாமும் களம் இறங்குவேன் என்று கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *