அரசின் அடிப்படை காப்பீட்டு திட்டம்! – அமீர் ஹம்சா அசிசான் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளின் தாக்கத்தைக் குறைக்க உதவும் வகையில் அடிப்படை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக நிதி அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா (BNM), சுகாதார அமைச்சு மற்றும் பல தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு கூட்டுக் குழு நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மலேசியர்களுக்கான அடிப்படை காப்பீட்டுத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை ஆராய்வதற்கான ரீசெட் திட்டம் தங்கள் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக RM211 மில்லியன் SME வங்கி முன்முயற்சியைத் தொடங்கிய பின்னர் கூறினார்.

திட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளவர்களில் காப்பீடு மற்றும் தக்காஃபுல் ஆபரேட்டர்கள் மற்றும் நிதித் துறை பிரதிநிதிகள் அடங்குவர் என்று அமைச்சர் கூறினார்.

திட்டம் தயாரானதும், செயல்படுத்தல் மாதிரி அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

சுகாதார காப்பீட்டு பிரீமியங்களை செலுத்த EPF கணக்கு 2 இலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்!

Kerajaan sedang mempertimbangkan pelaksanaan pelan insurans asas bagi mengurangkan kos rawatan. Jawatankuasa khas ditubuhkan melibatkan Kementerian Kewangan, BNM, dan Kementerian Kesihatan. Pelan ini akan dibentangkan selepas model pelaksanaan dimuktamadkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *