காணாமல் போன 3 சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD


சபா கோத்தகினபாலு  ரானாவில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் மூன்று சிறுமிகள் சண்டகானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ரானாவ் மாவட்டத்திலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சண்டகானில் சிறுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக  ரானாவ் மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் சிமியுன் லோமுடின் உறுதிப்படுத்தினார்.

அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் மீண்டும் விசாரணைக்காக ரானாவுக்கு அழைத்து வரப்படுவதாக அவர் கூறினார்.

மூன்று சிறுமிகளும் கடந்த் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் கம்பங் கைங்கரானில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து பள்ளியில் சிலாட் பயிற்சியில் கலந்து கொள்ளச் சென்றுள்ளனர், அதன் பின்னர் அவர்களைக் காணவில்லை.

இந்நிலையில்  இரவு 8.48 மணிக்கு குடும்ப உறுப்பினர்களால் காணாமல் போனோர் புகாரைப் பதிவு செய்தனர்.  மேலும் சிறுமிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவுவதற்காக போலிசார் உடனடியாகப் பொது அறிவிப்புகளை வெளியிட்டனர்.

முன்னதாக, மூன்று பேரும் மினிபஸ்ஸில் இருந்து இறங்குவதைக் கண்ட ஒரு நபர் அவர்களை வெள்ளை நிற பெரோடுவா விவா காரில் ஏற்றிச் சென்றதாகத் தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *