தலைநகரில் 6 கேளிக்கை மையங்கள் மூடப்பட்டது! DBKL அதிரடி!

top-news
FREE WEBSITE AD

நேற்றிரவு BANGSAR பகுதியில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடத்திய சோதனையில் 6 கேளிக்கை மையங்களை மூடியதாகத் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 9 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை இன்று அதிகாலை 4 மணிவரையில் நீடித்ததாகவும் BANGSAR பகுதியில் இயங்கி வந்த முக்கிய கேளிக்கை மையங்களை மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 கேளிக்கை மையங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும் குற்றச்சம்பங்களைக் கொண்டிருந்த 6 கேளிக்கை மையங்களிலிருந்து 35 தொழில்நுட்பச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தொடர் விசாரணையில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் உரிமம் இல்லாத கேளிக்கை மையங்களை உடனடியாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *