கல்வியே ஒரு தலைமுறையின் வெளிச்சம்! அதை வழங்கும் ஆசிரியர்களை வணங்குகிறோம்!

top-news
FREE WEBSITE AD


 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலேசியா வாழ் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் தமது ஆசிரியர் தின வாழ்த்துகளை,   ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் அவர்தம் புதல்வரும் மலர் டிவியின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் பழனீஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின்‌ அர்ப்பணிப்பு உணர்வை காலம்‌ முழுவதும்‌. நினைத்துப்‌ பார்க்கும்‌ நன்றியுணர்வு நம்‌ எல்லாரிடத்திலும்‌ இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்‌ என்று ஓம்ஸ்‌ அறவாரியத்‌ தலைவர்‌ ஓம்ஸ்‌ பா.தியாகராஜன்‌ தமது ஆசிரியர்‌ தின வாழ்த்துச்‌ செய்தியில்‌ தெரிவித்துள்ளார்‌.

 

இந்நாட்டில்‌ உள்ள தமிழ்ப்பள்ளிகளில்‌ ஆசிரியப்‌ பெருமக்கள்‌ ஆற்றி வரும்‌ பங்களிப்பை நாம்‌ எளிதில்‌ மறந்துவிட முடியாது. அந்தளவுக்கு மாணவர்களின்‌ கல்விக்‌ கண்களைத்‌ திறந்து அவர்களின்‌ எதிர்கால நல்வாழ்வுக்குத்‌ தூண்டுகோளாக இருப்பவர்கள்‌ ஆசிரியர்கள்தான்‌ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அண்மைய காலங்களில்‌ தமிழ்‌ ஆசிரியர்கள்‌ ஆற்றிவரும்‌ சேவைகளை நான்‌ நன்கு அறிவேன்‌. கல்வி‌ போதனைகளிலும்‌ இணைப்பாட நடவடிக்கைகளிலும்‌ ஆசிரியர்கள்‌ மாணவர்களுக்கு வழங்கி வரும்‌ சேவைகளுக்கு நன்றிகூறக்‌ கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்ஆசிரியர்களின்‌ பணி மேலும்‌ மாணாக்கர்களுக்கு பயன்தரும்‌ வகையில்‌ அமைந்திட வேண்டும்‌ என்று இந்த ஆசிரியர்‌ தினத்தில்‌ கேட்டுக்கொள்வதாக தமது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

நம் சமுதாயம் தரமான சமுதாயமாக உருவாக ஆசிரியர்களே மிக முக்கியக் காரணம். எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கிய, உருவாக்குகின்ற அவர்களை வணங்குகிறேன். கல்வியே ஒரு தலைமுறையின் வெளிச்சம் என்பதால், நமது ஓம்ஸ் அறவாரியம் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலப்பணிகளைச் செய்து வருகிறது. அதோடு ஆசிரியப் பெருமக்களுக்கும் அங்கீகாரம் அளித்து வருகிறோம். தொடர்ந்து கல்வி சார்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஓம்ஸ் அறவாரியம் முன்னெடுக்கும் என்று இந்த நல்ல நாளில் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் என டாக்டர் பழனீஸ்வரன் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *