இங்கே விமர்சனங்கள் அனுமதிக்கப்படுகின்றன! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் வீழ்ச்சியைக் கண்டது பொருத்தமற்றது என்று தெரிவித்தார். ஏனெனில் தமது அரசாங்கம் விமர்சனங்களுக்குத் திறந்தே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தரமிறக்கப்படுகிறோமா என்பது முக்கியமில்லை. ஆனால், இங்கே  விமர்சனங்கள் அனுமதிக்கப்படுகின்றன  என்று அன்வார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலையான  73 வது இடத்துடன் ஒப்பிடும்போது, தற்போது 34 இடங்கள் சரிந்து 107 வது இடத்தில் உள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த பிரதமர் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக தனது நிர்வாகம் எந்த பத்திரிகையாளர்களையும் கைது செய்யவில்லை அல்லது பத்திரிகைகளை தடை செய்யவில்லை என்று கூறினார்.

 எவ்வாறாயினும், ஊடக சுதந்திரத்திற்கு வரும்போது சில எல்லைகள் இருப்பதாக அவர் கூறினார். குறிப்பாக இனம், மதம் மற்றும் அரச குடும்பம் அல்லது 3R பிரச்சினைகள் தொடர்பான முக்கியமான தலைப்புகள் வரும்போது வரம்பு மீறக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

 இதுபோன்ற பிரச்னைகள் கலவரத்தைத் தூண்டும் என்று கூறிய அவர் மலேசியாவில் அதை அனுமதிக முடியாது என்றும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *