மூடா தலைவர் பதவி விவகாரம்... ஒன்று சேர்ந்து முடிவெடுப்போம்! – சையத் சாதிக்

- Shan Siva
- 25 Jun, 2025
புத்ராஜெயா, ஜூன் 25: ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து மூவார் எம்.பி. சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை அடுத்து, கட்சியில் அவரது நிலைப்பாடு குறித்து மூடா இன்று விவாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம்
குறித்து இரவு ஆலோசிக்கப்படும் என்று அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெளியே
செய்தியாளர்களிடம் கட்சியின் தற்காலிகத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ்
கூறினார்.
மேலும், நீதிமன்றத்தின்
முடிவில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், அது சையத் சாதிக்கின் நேர்மையை நிரூபித்ததாகவும் அமிரா கூறினார்.
இதற்கிடையில், மூடா தலைவர் பதவியை மீண்டும் பெறுவதா இல்லையா என்பது குறித்த எந்தவொரு முடிவும் "ஒன்றாகச் சேர்ந்து எடுக்கப்படும்" என்று சையத் சாதிக் தெரிவித்துள்ளார்!
Selepas Syed Saddiq dibebaskan daripada tuduhan rasuah, MUDA akan berbincang malam ini tentang kedudukannya dalam parti. Pemangku Presiden Amira menyatakan keputusan mahkamah membuktikan integritinya, dan Saddiq berkata sebarang keputusan dibuat secara bersama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *