நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!

top-news
FREE WEBSITE AD

உலு திராம் காவல் நிலையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாடு மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்து பலப்படுத்தப்படும் என
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், குறிப்பாக அலுவலகம் அல்லாத நேரங்களில் பணிபுரிபவர்கள் அதிக விழிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.

இனிமேல், காவல் நிலையத்திற்குள் நுழையும் எவருக்கும் குறிப்பாக இரவு நேரத்தில் சோதனைச் செயல்முறையை நாங்கள் கடுமையாக்குவோம், நெறிப்படுத்துவோம்  என்றும் அவர் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தில் உள்ள  10 மாவட்ட காவல்துறை தலைமையகம் உட்பட அனைத்து காவல்நிலையங்களிலும் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களின் தயார்நிலையை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிளந்தான் காவல்துறை தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *