அமெரிக்காவின் பதில் ஏமாற்றம் தருகிறது! – அன்வார்

top-news
FREE WEBSITE AD


காசாவில் இஸ்ரேலின் போரை நிறுத்த தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற மலேசியாவின் வேண்டுகோளுக்கு அமெரிக்கா அளித்த பதிலில் தாம் ஏமாற்றமடைவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

னது வெளிப்பாடு மற்றும் உணர்ச்சிமிக்க அழைப்பை மிகவும் உன்னிப்பாகக் கேட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்பாக தான் அத்தகைய வேண்டுகோளை விடுத்ததாகவும், ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பகைமையை நிறுத்த அமெரிக்கா தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். அவர்கள் செல்வாக்கு, மற்றும் இராஜதந்திர திறன்களைக் கொண்டுள்ளனர். எனவே, இஸ்ரேலின் அட்டுழியங்களை நிறுத்தும்படி கட்டாயப்படுத்த அவர்களால் முடியும் என்று அவர் கூறினார்.

கத்தாரில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உடனான தனது அண்மைய சந்திப்பை அவர் ஆதரித்தார்.  

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களின் சில பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அதை உங்களால் மறுக்க முடியாது என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

இது காசாவில் அமைதி முன்னெடுப்புகளை ஆதரிக்கும் மலேசியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்.

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 கத்தாருக்கான அன்வாரின் அரசு முறை பயணத்தின் போது இஸ்மாயில் தலைமையிலான ஹமாஸ் குழுவைச் சந்தித்தது, மலேசியாவின் நண்பர்களிடையே, குறிப்பாக மேற்கு நாடுகளில் கவலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை அன்வார் ஒப்புக்கொண்டார்.

 இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்ததில் இருந்து குறைந்தது 35,562 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. குறைந்தது 79,652 பேர் காயமடைந்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]