சிலாங்கூரில் அதிகரிக்கும் பாலியல் சம்பவங்கள்!

top-news
FREE WEBSITE AD

பாலியல் குற்றச் சம்பவங்கள்  சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் தெரிவித்தார்.

 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது சிலாங்கூரில் மக்கள் தொகை அதிகம் உள்ளதன் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  பொருளாதார காரணிகள் கூடுதலாக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 

 

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ இருக்கின்றனர்.  பாலியல் குற்றவாளிகளைப் பொருத்தமட்டில்  அவர்களின் தோற்றத்தை வைத்தோ, குணத்தை வைத்தோ அளவிட முடியாது என்று சித்தி கம்சியா தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *