ஈரான் அதிபர் மறைவுக்கு அன்வார் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD



ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின் போது  ரைசியை சந்திக்கும் பெருமை தமக்கு கிடைத்ததாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.


அவர் தனது மக்களின் நலன் மற்றும் தனது தேசத்தின் கண்ணியத்திற்கு ஆழ்ந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டினார். இது இஸ்லாத்தின் கொள்கைகளில் வேரூன்றிய பெருமைமிக்க மற்றும் வளமான நாகரிகத்தை பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார்.

நீதி, அமைதி மற்றும் உம்மாவின் மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என்று அன்வார் தமது முகநூல்  பதிவில் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *