ஹன்னா யோவின் கணவருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் தவறில்லை! - டான்ஸ்ரீ அஸாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD


 இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவின் கணவருடன் தொடர்புடைய, Asia Mobility Technologies Sdn Bhd-க்கு ஒப்பந்தம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு  ஆணையமான (MACC கூறியது.

சிலாங்கூர் ஒப்பந்தம் ஹன்னாவின் அமைச்சகத்தால் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை, ஆனால் சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்.

சட்டப்படி, ஒரு நபர் அவர்களுக்கு தொடர்பில்லாத ஏஜென்சி அல்லது நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் அல்லது எந்த வகையான நன்மையையும் பெற்றால் அது குற்றமாகாது.

ஹன்னா யோவின் கணவர் விஷயத்தில், நான் ஊடக அறிக்கைகளில் இருந்து படித்ததன் அடிப்படையில், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக இருக்கும் போது சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் இருந்து ஒப்பந்தம் பெற்றார்.

 அமைச்சுக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. வழங்கப்பட்ட திட்டம் வேறொரு நிறுவனத்தின் திட்டமாகும் என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒப்பந்தம் வழங்குவதில் எந்த தவறும் இருப்பதாக நான் காணவில்லை என்று தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசாங்கம் அதன் சிலாங்கூர் மொபிலிட்டி முன்முயற்சிக்காக Asia Mobility Technologies Sdn Bhd இன் நியமனத்தை ஆதரித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

யோவின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி, ஆசியா மொபிலிட்டிஸின் தலைமைச் செயல் அதிகாரி என்பது தெரியவந்ததை அடுத்து, திட்டத்தின் டெண்டர் செயல்பாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அசாம் பாக்கி இவ்வாறு பதில் அளித்தார்!

 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *