கூகுளின் தரவு மையம்... பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்! - அன்வார் பெருமிதம்

top-news
FREE WEBSITE AD



மலேசியாவில் கூகுளின் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (RM9.4 பில்லியன்) முதலீட்டு அர்ப்பணிப்பு, நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் எளிமையாக்குவதற்கும் அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை ஆதரிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கூகுள் நிறுவனம் டேட்டா சென்டர் மற்றும் கூகுள் கிளவுட் பிராந்தியத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனத்தை அமைக்க உள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

இந்த முதலீடு 26,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த முதலீடு மலேசியப் பொருளாதாரத்தில் (சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) (RM15.04 பில்லியன்) பல மடங்கு விளைவைத் தூண்டும் என்றும், 2030க்குள் மொத்தம் 26,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இன்று தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் முதல் கூகுள் தரவு மையத்தை நிறுவுவதன் மூலம் நேரடி முதலீடு மற்றும் பிராந்தியத்தில் கூகுள் கிளவுட் மேம்பாடு ஆகியவை அரசாங்கத்தின் தெளிவான திட்டமிடல், பொருளாதாரத்தின் வலிமை மற்றும் நாட்டின் வளங்கள் ஆகியவற்றுடன் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன என்பதை நிரூபிக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மே 6 அன்று கூகுளின் மூத்த நிர்வாகத்துடனான ஒரு மெய்நிகர் சந்திப்பில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைத் தவிர, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதையும் அன்வார் சுட்டிக்காட்டியுள்ளார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *