அரை மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு – உயர் ரத்த அழுத்தம்! - சுகாதார அமைச்சு கவலை

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது மக்கள்தொகையில் 2.5 விழுக்காட்டினர்  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகிய நான்கு முக்கிய தொற்றாத நோய்களால் (NCDs) பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்குப் பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 இன்று வெளியிடப்பட்ட 2023 தேசிய உடல்நலம் மற்றும் நோயுற்ற ஆய்வின் (NHMS) கண்டுபிடிப்புகள், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மலேசியர்கள் அல்லது மக்கள் தொகையில் 33.3 விழுக்காட்டினருக்கு அதிக கொழுப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது; 3.6 மில்லியன் (15.6 சதவீதம்) பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது, 6.7 மில்லியன் (29.2 சதவீதம்) பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வின் கண்டுபிடிப்புகள் இளையவர்களிடையே கண்டறியப்படாத நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அதிக விகிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

இளம் வயதினரிடையே கண்டறியப்படாத என்சிடிகள் அவர்களுக்கு முந்தைய வயதிலேயே உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் இது கவலையளிக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *