மத்திய ஆசியப் பயணத்தின் மூலம் அரசு RM2.1 பில்லியனை ஈட்டலாம் -  பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தின் மூலம் குறைந்தபட்சம் 2.1 பில்லியன் ரிங்கிட் முதலீடு மற்றும் வர்த்தகத் திறனை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பயனளிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

ஒட்டுமொத்தமாக மலேசியாவுக்கும் மத்திய ஆசியாவிலுள்ள நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருக்கும் இந்தப் பயணத்தின் முடிவுகளில் நான் திருப்தி அடைகிறேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அன்வார் மே 14 அன்று கிர்கிஸ்தானுக்கு தனது பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து மே 16 அன்று கஜகஸ்தான். பயணத்தின் கடைசிக் கட்டமாக உஸ்பெகிஸ்தான் இருந்தது.

உஸ்பெகிஸ்தானுக்கான எனது உத்தியோகபூர்வ பயணம் இருதரப்பு உறவுகள், முதலீடு, வர்த்தகம் மற்றும் மலேசியா-உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பை ஒரு உயர் மட்டத்திற்கு வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது, குறைந்தபட்சம் RM710 மில்லியன் ஏற்றுமதி திறன் கொண்டது என்று டத்தொஸ்ரீ அன்வார் கூறினார்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார் மலேசியாவுக்குப் புறப்படுவதற்கு முன், உஸ்பெகிஸ்தானின் முதல் துணைப் பிரதமர் அச்சில்பே ஜுமானியாசோவிச் ராமடோவ் மற்றும் பிற தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக கூறினார்.

விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், உஸ்பெகிஸ்தான் தலைமை புகாராவின் மிக உயர்ந்த தலைவருக்கு சப்பான் புகாரா என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பாரம்பரிய உடையை வழங்கினேன் என்றும் அன்வர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை  உஸ்பெகிஸ்தானில் நாங்கள் தங்கியிருந்தபோது பிரம்மாண்ட விருந்தோம்பலுக்கு எனது  பாராட்டுகளைத் தெரிவித்தேன் என்றும் உஸ்பெகிஸ்தானில் இருந்து நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அங்கிருந்து விலகிச் செல்வது மனவேதனை அளிக்கிறது என்றும் பிரதமர் அன்வர் கூறினார்.

ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ்வுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட நட்பைப் பெரிதும் பாராட்டுவதாகவும், எங்கள் சந்திப்பு மற்றும் விவாதம் முழுவதும் திருப்திகரமாக அமைந்ததற்கு நன்றி எனவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *