PETROL நிலையத்தில் கார் வெடித்து இருவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

Perlis, Kangar பகுதியில் உள்ள எரிவாயு நிறப்பும் கிடங்கில் வாகனத்திற்கு எரிவாயு நிரப்பும் போது வாகனம் திடிரென வெடித்து சிதறியது. 

இவ்வெடிப்புச் சம்பவத்தின் போது வாகன உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் காயமடைந்ததாக  Kangar மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார். 

வெடிப்பு சம்பவம் ஏற்பட்ட சுமார் 15 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தியதால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் வாகன உரிமையாளரின் அலட்சியப் போக்கே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் வாகன உரிமையாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என Kangar மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார். 

மேலும் இத்தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர் தற்போது நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *